தஞ்சாவூர், டிச.21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தஞ்சை மாவட்டக் குழு சார் பில், இடைக்கமிட்டி உறுப்பினர் கள், கிளைச் செயலாளர்கள், பிராக்சன் உறுப்பினர்களுக்கான சிறப்பு பேரவைக் கூட்டம் தஞ்சை நான்சி மகாலில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் மாநிலக் குழு உறுப்பினரும், சிபிஎம் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினருமான ஆனந்தன் கட்சி நிதி திரட்டல் குறித்த கருத்துகளை பேசினார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக் குழு உறுப்பினர் உ.வாசுகி சிறப்புரையாற்றினார். சிபிஎம் மூத்த தலைவர் என். சீனிவாசன், ஆர்.மனோகரன், பி. செந்தில்குமார் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள், இடைக்கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கட்டட நிதி
இப்பேரவையில், பி.ஆர்.நினைவக கட்டட நிதியாக, சிஐ டியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார் பில், மாநிலச் செயலாளர் சி.ஜெய பால் முன்னிலையில், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மதியழகன், செயலாளர் வீரையன், பொருளாளர் பன்னீர்செல்வம், துணைத்தலைவர் காமராஜ், துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ரூ.10 ஆயிரத்தை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி ஆகி யோரிடம் வழங்கினர். இதேபோல், குருங்குளம் சர்க் கரை ஆலை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கிளை சார்பில், பி.ஆர். நினைவக கட்டட நிதியாக, ரூ.5 ஆயி ரத்தை சிபிஎம் தஞ்சை ஒன்றியச் செயலாளர் கே.அபிமன்னன் முன் னிலையில், கிளைச் செயலாளர் ரங்கநாதன், ஒன்றியக் குழு உறுப் பினர்கள் பன்னீர்செல்வம், கோவிந்தராஜ், சங்கிலிமுத்து, விவ சாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் சண்முகவேலு, ஒன்றி யத் தலைவர் கண்ணன், மாதர் சங்கம் ஒன்றியச் செயலாளர் வன ரோஜா, பெண் விவசாய தொழிலா ளர் சங்க மாவட்டக் குழு உறுப்பி னர் விஜயலட்சுமி ஆகியோர் வழங்கினர்.