districts

பணத்தை மோசடி செய்ததாக புகார்: பாதிக்கப்பட்டோர் முற்றுகை போராட்டம்

பட்டுக்கோட்டை, டிச.16 -  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சாந்தங்காடு வெட்டிக்காடு கிராமத்தில் கிளை அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கிளை அஞ்சலகத்தில் பட்டுக் கோட்டை கரிக்காடு பகுதியைச் சேர்ந்த தன சேகரன் என்பவர் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த அஞ்சலகத்தில், இப்பகுதியைச் சேர்ந்த 950-க்கும் மேற்பட்டோர் சேமிப்பு கணக்கு மற்றும் பல்வேறு கணக்குகளை தொடங்கி பணத்தை சேமித்து வருகின்ற னர். இந்நிலையில் போஸ்ட் மாஸ்டர் தன சேகரன் வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்த பணம் சுமார் ரூ.70 லட்சத்தை கை யாடல் செய்ததாக கூறி, பொதுமக்கள் கடந்த  சில தினங்களுக்கு முன்பு கிளை அஞ்சல கம் முன்பு போராட்டம் நடத்தினர். இந்நிலை யில் தனசேகர் தலைமறைவாகி விட்டதாக வும் கூறப்படுகிறது.  இதுவரை அதுகுறித்து  தபால் துறை அதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படு கிறது.  இந்நிலையில் பட்டுக்கோட்டை தலைமை  அஞ்சலக அதிகாரிகளிடம் சாந்தங்காடு, வெட்டிக் காடு பொதுமக்கள் இது தொடர்பாக கேட்ட போது அங்கிருந்த அதிகாரிகள் முறையாக  பதில் அளிக்கவில்லை எனவும் கூறப்படு கிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் பச்சமுத்து  தலைமையில்,  நூற்றுக்கும் மேற்பட்டோர்  தலைமை அஞ்சலகம் முன்பு முழக்கங்களை எழுப்பி தங்கள் பணத்தை மீட்டு தரக் கோரி  திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த பட்டுக்கோட்டை காவல் உதவி  ஆய்வாளர் முத்துக்குமார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார்.  தங்கள் பணத்தை மீட்டுத் தர அஞ்சல்  துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.