districts

“வாகை சூட வா” மாணவர் பயிற்சி முகாம்

கும்பகோணம், ஏப்.30 - கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) வேலை வாய்ப்புப் பிரிவு சார்பாக மாணவர்களுக்கான சுய முன்னேற் றப் பயிற்சி முகாம் “வாகை சூட வா” மூன்று நாட்கள் நடை பெற்றது. இம்முகாமில் முதல்நாள் தொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் க.துரையரசன் தலைமையுரை ஆற்றினார். தேர்வு நெறியாளர் முனைவர் வே.இராமசுப்ரமணியன் மற்றும்  அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்ற னர். டெரடிஷியன் ரோட்டரி கிளப் ஆப் கும்பகோணம் ரோட்டரி யன் தலைவர் சுஜோ. கணேஷ் மாணவ-மாணவியர்களுக்கு பயிற்சி அளித்தார். பயிற்சியின்போது “மாணவர்களின் வாகையே  (வெற்றி) கல்லூரியின் வெற்றி என்றார். புள்ளியியல், ஆங்கிலம்,  தமிழ், விலங்கியல், கணினி பயன்பாட்டியல் மற்றும் கணினி அறிவியல் துறை சார்ந்த மாணவ-மாணவிகள் 150 பேர் பயிற்சி  பெற்றனர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை வேலை வாய்ப்புப்  பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரமேஷ் சாமியப்பா செய்திருந்தார்.