districts

img

பாபநாசம் பகுதியில் ஆட்சியர் ஆய்வு

பாபநாசம், மார்ச் 10-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  பாபநாசம் அரசு மருத்துவமனை, சக்கராப்பள்ளி ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறை கட்டுமான பணிகள், தொடக்க பள்ளி யில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும், அய்யம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அங்காடியில் வழங்கப்படும் உணவுப் பொருள்களின் தரம், விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் உதவி குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.  ஆய்வின் போது, பாபநாசம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சுமதி, வட்டாட்சியர் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார்,  சுதா உட்பட கலந்துக் கொண்டனர்.

;