தஞ்சாவூர், ஏப்.5- டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுப்பு ஏல அறி விக்கையைக் கண்டித்தும், விவசாயிகளின் தில்லி பேர ணிக்கு ஆதரவு தெரிவித் தும், தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கம், சிஐடியு சார்பில், புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசு வேளாண் விளைபொருட்க ளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க ஒத்துக் கொண்டு வழங்காதது, தொழிலாளர் நலனில் 44 சட்டங்களை 4 தொகுப்புகளாகச் சுருக்கி, தொழிலாளர் நல உரிமைச் சட்டங்களைப் பறிப்பது, கிரா மப்புற நூறு நாள் வேலை திட்ட நிதிக் குறைப்பு, காவிரி டெல்டா பகுதியில் ஒன்றிய பாஜக அரசின் நிலக்கரி எடுப்பு ஏல அறிவிக்கை ஆகி யவற்றை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுத்து பாலைவனமாக்க வேண்டாம். நிலக்கரி எடுப்பு ஏல அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும்” என வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், ஆர்.கலைச்செல்வி, மாநகரச் செயலர் எம்.வடிவேலன், மாவட்டக் குழு உறுப்பினர் என்.குருசாமி, சிஐடியு நிர் வாகி இ.டி.எஸ். மூர்த்தி, த. முருகேசன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங் கம் மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு, மாவட்டத் தலை வர் ஆர்.பிரதீப் ராஜ் குமார், மாதர் சங்க மாவட்டச் செய லர் இ.வசந்தி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.