ஒரத்தநாடு, ஏப்.4 – தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கொல்லைக் காடு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், கடந்த வாரம் திருவிழா நடந்தது. திருவிழாவை முன்னிட்டு, நாடகம் நடந்த போது அழகர் என்பவரது தலைமையிலான பிரிவினருக்கும், அஜித் என்பவர் தலைமையிலான பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அடிதடி நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பிரிவுகளை சேர்ந்த 12 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த மோதலில் காயமடைந்து, தஞ்சாவூர் மருத்து வக்கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த, கூலித் தொழிலாளியான நீதி (40) திங்கள்கிழமை அதிகாலை சிகிச்சை உயிரிழந்தார். இதையடுத்து, இறந்த நீதியின் மனைவி தீபா, அவரது மகள்கள் செளமா, நிக்கா ஸ்ரீ, மகன் நிக்கோ லஸ், உறவினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், வாட்டாத்திக்கோட்டை பகுதியில், “உயிரிழந்த, நீதியின் மனைவி தீபாக்கு அரசு வேலை வழங்க வேண்டும், இறந்த நீதியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுடன் அரசுத் தரப்பில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில், நீதியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கிடைக்கவும், அரசின் உத்தரவின் பேரில், பணி வழங்க வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் தீபா விற்கு அரசு பணி வழங்கப்படும் என உறுதியளிக்கப் பட்டது. இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.