தஞ்சாவூர், மார்ச் 7- சில்லறை வணிகத்தைப் பெரும் முதலாளிகள், அந்நிய நிறுவனத்தினர் கைப்பற்றும் சூழல் உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் த. வெள்ளையன் கூறினார். தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வணி கர் தின மாநில மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத் தில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் த.வெள்ளையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆண்டுதோறும் மே 5-ஆம் தேதி வணிகர் தின மாநாடு நடத்தப்படுகிறது. நிகழாண்டு செங்கல்பட்டு அருகே யுள்ள அச்சரப்பாக்கத்தில் வணிகர் தின மாநாடு நடை பெறுகிறது என்றார். மேலும் அர் கூறுகையில், “சில்லறை வணிகத்தை மிகப் பெரிய அளவில் சீர்குலைக்கும் வகையில் பெரும் பண முதலீடுகளும், அந்நிய நிறுவனங்களும் வரு கின்றன. இதனால், சில்லறை வணிகம், சுய தொழில், விவ சாயம் மிகப் பெரும் பாதிப்புக்குள்ளாகும். சில்லறை வணி கத்தைப் பெரு முதலாளிகள், அந்நிய நிறுவனத்தினர் கைப்பற்றும் சூழல் இருக்கிறது. சில்லறை வணிகத்தைக் காப்பாற்ற மிகப் பெரும் போராட்டங்களை நடத்தவும், அந்நிய ஆதிக்கத்தை முறி யடித்து உள்நாட்டு வணிகத்தைக் காப்பாற்றவும் மாநாட்டில் முடிவெடுக்கப்படவுள்ளது. அரிசிக்கு வரி விதித்தால் சாமானிய, ஏழை மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவர். இப்படியொரு சூழல் வந்தி ருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. அரிசிக்கு வரி விதிக் கக் கூடாது என்றார்.