பேராவூரணி, ஜன.27- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் ஸ்ரீ பிள்ளையார் குரூப்ஸ் நண்பர்கள் அசோசியேஷன் சார்பில், 21 ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாபெரும் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பந்தயத்தை தொடங்கி வைத்தார். தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும், பட்டுக்கோட்டை எம்எல்ஏவுமான, கா. அண்ணாதுரை, பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.