districts

அரசுப் பேருந்து மோதி அண்ணன், தம்பி பலி

உளுந்தூர்பேட்டை, மார்ச் 16- தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (24). அவரது தம்பி விஜய் பழனி (22). இவர்கள் இருவரும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகேயுள்ள தலப்பாக்கட்டு பிரியாணி கடையில் வேலை செய்து வந்தனர். இவர்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் வியாழக்கிழமை மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டைக்கு திரும்பினர். உளுந்தூர்பேட்டை சேந்த நாடு குறுக்குச் சாலையில் அவர்கள் வந்து கொண்டிருக்கும் போது புதுச்சேரியிலிருந்து ஈரோட்டு நோக்கிச் சென்ற அரசு பேருந்து எதிரில் வந்த இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.