districts

img

தமுஎகச சார்பில் பாரதியார் நினைவுதின நிகழ்ச்சி

தஞ்சாவூர், செப்.11-  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்-கலைஞர்கள் சங்கத்தின் தஞ்சா வூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி கிளை சார்பில், முல்லைக்குடி கிரா மத்தில் மகாகவி பாரதியாரின் 101-ஆவது நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. கிளை பொருளாளர் வழக்க றிஞர் எம்.கே.சேகர் தலைமை வகித்  தார். மகாகவி பாரதியின் உருவப் படத்தை ஊராட்சி மன்றத் தலை வர் செந்தில்நாதன் திறந்து வைத்து  மலர் மாலை அணிவித்து அஞ்சலி  செலுத்தினார். இதில் தமுஎகச மாவட்ட குழு உறுப்பினர் டி.சுத்தானந்தம், கிளை தலைவர் பி.ஆயிராசு, கிளைச் செயலாளர் பி.தாமரைச் செல்வன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பி.முருகேசன், கிராம நிர்வாக குழு தலைவர் புகழேந்தி, தமிழரசன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தஞ்சாவூரில், தமுஎகச சார்பில்,  பாரதியார் சிலைக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் களப்  பிரன் தலைமையில் மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது.  தமுஎகச மாவட்டச் செயலா ளர் ஆர். விஜயகுமார், மாவட்டக்  குழு உறுப்பினர் என்.சிவகுரு,  இணைச் செயலாளர் ப.சத்ய நாதன், மாநகரச் செயலாளர் ஸ்ரீதர்  உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.  பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு தமுஎகச கிளை சார்பில் பாரதி யின் உருவப்படத்திற்கு மாலை  அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.
கும்பகோணம்
கும்பகோணம் பாரதி புத்த காலயத்தில் பாரதியின் உருவப் படத்திற்கு தமுஎகச சார்பில் மரி யாதை செலுத்தப்பட்டது. மாவட் டத் தலைவர் சா ஜீவபாரதி, கிளை  செயலாளர் அசோக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

;