பாபநாசம், அக்.30 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலர் சரவணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “மயிலாடு துறை, பெங்களூர், மைசூர் இடையே மீண்டும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் வண்டியை (ஒரு மாதத்திற்கு மட்டும்) தென்மேற்கு ரயில்வே இயக்குவதாக அறி வித்துள்ளது. வ.எண்: 06251 - மைசூர் - மயிலாடு துறை, வ.எண்:06252 - மயிலாடுதுறை - மைசூர் அக்.28, நவ.4, 11, 18 ஆகிய தேதிகளில் பெங்க ளூரிலிருந்து மயிலாடுதுறைக்கு இரவு 2.20 மணிக்கும் அக்.29, நவ.5, 12, 19 ஆகிய தேதி களில் மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கும் இயக்கப்படுகிறது. இரு மார்க்கங்களிலும் இந்த சிறப்பு ரயில் வண்டி பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். பெங்களூரிலிருந்து பாபநாசத் திற்கு வரும் நேரம் மதியம் 2 மணி. பாப நாசத்திலிருந்து பெங்களூர், மைசூர் செல்ல புறப்படும் நேரம் இரவு 7.30 மணி. இந்த வண்டிக்கான முன்பதிவு தொடங்கி விட்டதால் (பொதுப்பெட்டிகள் இந்த வண்டி யில் கிடையாது) முன்பதிவு செய்த பயணி கள் மட்டுமே பயணம் செய்ய முடியும். எனவே, பயணிகள் விரைந்து முன்பதிவு செய்து பயன்பெற” வேண்டுகிறோம்.