தஞ்சாவூர், ஜூன் 3- தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட் டுள்ளது. இதில் தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் நெட்டி வேலை, சுவாமி மலை ஐம்பொன் சிலை, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, திருபுவனம் பட்டு, கலம்காரி ஓவியம் உள்ளிட்ட கைவினை பொருள்களும், தஞ்சாவூர் வீணை மற்றும் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் உள்ளிட்ட இசைக்கருவிகளும் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. தமிழகத்திற்கு இதுவரை மொத்தம் 40 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றிருக்கிறது. அதில் தஞ்சாவூருக்கு மட்டும் 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த புவிசார் குறியீடு பெற்ற பொருட் களின் சிறப்பினை அனைவரும் அறியும் வண்ணமும், அவற்றிற்கு உரிய சந்தை யினை உருவாக்கிடவும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில், சமீபத்தில் பாரத பிரதமர் பாராட்டிய சுய உதவி குழுக்க ளின் தஞ்சை தாரகை பொருட்கள் விற்பனைய கமும் ஒன்றாகும். ஜூன் 4 (சனிக்கிழமை), ஜூன் 5 (ஞாயிற்றுக் கிழமை) ஆகிய இரண்டு நாட்கள், தஞ்சாவூர் மணிமண்டபத்தில் தஞ்சை மாவட்டத்தில் புவி சார் குறியீடு பெற்ற பொருட்களின் கண் காட்சி, செய்முறை விளக்கம், விற்பனை நடை பெற உள்ளது. இந்த கண்காட்சியில், பொது மக்கள் மற்றும் குழந்தைகள் திரளாக கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.