districts

img

தஞ்சை புத்தகத் திருவிழாவில் ரூ. 2.5 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை: ஆட்சியர்

தஞ்சாவூர், ஜூலை 26-  தஞ்சாவூர் அரண்மனை வளாகத் தில் ஐந்தாவது புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலை மையில் திங்கள்கிழமை மாலை நடை பெற்றது.  தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக  பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையா ளர்கள் சங்கம் சார்பில், கடந்த ஜூலை  15 முதல் 25 வரை ஐந்தாவது புத்த கத் திருவிழா நடைபெற்றது. நிறைவு விழாவில் கலந்து கொண்டு  மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசுகையில், “இந்த புத்தகத்  திருவிழாவில் இதுவரை 20 ஆயிரம்,  கல்லூரி மாணவ, மாணவிகளும், 40  ஆயிரம் பள்ளி மாணவ, மாணவி களும் மற்றும் வாசகர்கள் என சுமார்  1.5 லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்றுற் ளனர். இக்கண்காட்சியில் ரூ. 2.5  கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனை யாகி உள்ளது. மேலும், புத்தகத் திருவிழா நடைபெற்ற 11 நாட்களில் இலக்கிய அரங்கம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி,  கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சி, நகைச்சுவை சிந்தனை அரங்கம்  போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்றன” என்றார்.  இதனைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 138 பேருக்கு பரிசுகளை யும், சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங் கினார். நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், கல்லூரி கல்வி இயக்கக இணை இயக்குனர் எழிலன், முதன்மை கல்வி  அலுவலர் சிவக்குமார், பபாசி செயலா ளர் எஸ்.கே.முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.