பட்டுக்கோட்டை, ஜன.24- பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்ப னைக் கூடத்தில் ஜனவரி 25 முதல் புதன்கிழமைதோறும் தேங்காய், கொப் பரை மறைமுக ஏலம் விடப்படும் என தஞ்சா வூர் மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, விற்பனைக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக் கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், ஒரத்த நாடு விற்பனைக் குழுவுக்குட்பட்ட மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 50,000 ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளின் தொடர் கோரிக்கை மற்றும் நலனை கருத்தில் கொண்டு, பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், ஒவ்வொரு வார மும் புதன்கிழமை தேங்காய் மற்றும் கொப் பரை மறைமுக ஏலம் உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட வணிகர்களை கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டா ரப் பகுதிகளைச் சார்ந்த விவசாயிகள் தென்னை விளைபொருட்களை, மறைமுக ஏலத்தின் மூலம் அதிகபட்ச விலைக்கு விற் பனை செய்து பயனடையுமாறு தஞ்சாவூர் விற்பனைக்குழு செயலாளர் ம.சரசு கேட்டுக் கொண்டுள்ளார். கூடுதல் விவரங்களுக்கு, பட்டுக் கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தியை 9445116346 என்ற எண்ணில் தொடர்பு கொள் ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.