தஞ்சாவூர், பிப்.1- தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுகா மற்றும் தஞ்சை தாலுகாவின் சில இடங்களில் ஆயிரக்கணக் கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் அறுவடை பணி கள் நடைபெற்று வருகின் றன. சில இடங்களில் பயிர் களுக்கு தண்ணீர் தேவைப் படும் நிலை உள்ளது. இந்நிலையில், பூதலூர் தாலுகா மற்றும் தஞ்சை தாலுகா பகுதியில் பின்பட்ட தாளடி சாகுபடி செய்த சுமார் 5,000 ஏக்கர் பரப்பில் தற் போது சூழ் பிடித்து தண்டு உருளும் நிலையில் உள் ளது. கல்லணை கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத் தப்பட்டதால், இந்த பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. ஏற்கனவே தண்ணீர் முறை யாக வராததால், பயிர்கள் காய்ந்து வந்ததாக விவசாயி கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பாசனத் திற்கு தொடர்ந்து 15 நாட்க ளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங் கம் சார்பில் பூதலூர் நான்கு ரோட்டில், புதன்கிழமை தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச் செல்வி, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் சி.பாஸ் கர் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக் கான விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு கல்லணை கால் வாய் கோட்ட உதவி செயற் பொறியாளர் சீனிவாசன், பூதலூர் வட்டாட்சியர் பெர் சியா மற்றும் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயி களின் சூழ்நிலை குறித்து மாவட்ட ஆட்சியருடன் பேசி உரிய முடிவெடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்று சாலை மறியல் கைவிடப் பட்டது.