தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் விவேகானந்தா கல்விச் சங்கம் சார்பில் அகில இந்திய அளவில் தில்லியில் நடந்த சிலம்ப போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா, ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு விவேகானந்தா தொண்டு நிறுவனத்தின் தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் சாந்தி தேவராஜன், சிலம்ப போட்டியில் வென்ற பாபநாசத்தைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கி பாராட்டிப் பேசினார்.