பாபநாசம், ஏப்.5- தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாயத்திற்கு கால்நடைகளின் கழிவை இயற்கை உரமாக பயன்படுத்த விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். முன்பு கால்நடை கழிவை (மாட்டின் சாணத்தை) இயற்கை உரமாக வயல்களுக்கு இட்டு விவசாயம் செய்து வந்தனர். அதன் பொருட்டு விவசாயிகள் வீடுகளில் கால் நடைகளை வளர்த்து வந்தனர். ஆனால் சமீப காலமாக கிராமங்களில் கால்நடை வளர்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்ட தால், கால்நடை கழிவுகள் கிடைப்பதில் தட்டுப்பாடு உள்ளது. இதனால் இயற்கை உரத் திற்கு கடும் தட்டுப்பாடு நிலவி, ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்தது. ரசாயன உரங்க ளால் மண்வளம் பாதிக்கப்படு வதோடு, அதில் விளைகின்ற தானியங்களை உண்ணும் மனிதர்கள் மட்டுமின்றி, கால் நடை உள்ளிட்ட உயிரினங்க ளும் பல்வேறு நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றன. தற்போது ரசாயன உரத் தட்டுப்பாடு, விலை உயர்வு கார ணமாக சில விவசாயிகள் மீண்டும் இயற்கை உரத்திற்கு மாறி வருகின்றனர். கால்நடை களை வயலில் அடைத்து வைப் பதன் மூலம் அவற்றின் கழிவு கள் விவசாய நிலத்திற்கு இயற்கை உரமாகக் கிடைக்கி றது. இதற்காக அரியலூர் உள் ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாடுகள் பாபநாசம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மேய்ச்சலுக் காக கொண்டு வரப்படுகின்றன. கிடை அமைக்கும் பணியில் தொழிலாளிகள் ஈடுபட்டு வரு கின்றனர். இதுகுறித்து கோரைக்குடி யைச் சேர்ந்த கூலித் தொழி லாளி ஒருவர் கூறுகையில், “அரியலூர், கோரைக்குடி உள் ளிட்ட பகுதிகளிலிருந்து வந்து சுமார் 5 மாதம் வரை பாபநாசம் மட்டுமல்லாது, பட்டுக்கோட்டை உள்ளிட்டப் பகுதிகளுக்கும் செல்வோம். நாங்கள் 8 பேர் வந்துள்ளோம். வயலில் இரவு கிடை அமைத்து தங்கி மேய்ச்ச லில் ஈடுபடுத்துவோம். ஒரு இர வுக்கு கிடை வைக்க ரூ.7000 பணம் மற்றும் அரிசியை கூலி யாகப் பெறுவோம்” என்றார்.