தஞ்சாவூர், ஜன.21- சோழர்களின் வரலாறு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத் தும் விதமாக 300 கி.மீ., தூர சைக்கிள் பயண விழிப்புணர்வு தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை துவங்கியது. சென்னையைச் சேர்ந்த சைக்கிளிங் யோகிஷ் குழுவை சேர்ந்த 60 பேர் சோழர்களின் வரலாறு குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் பயணத்தை துவங்கி னர். சைக்கிள் பயணத்தை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் துவக்கி வைத்தார். இது குறித்து சைக்கிளிங் யோகிஷ் குழுவை சேர்ந்த ராமானுஜம் கூறுகை யில், ‘‘பொன்னியின் செல்வன் சுற்றுப் பயணம்’’ என்ற பெயரில், எங்களது விழிப்புணர்வு சைக்கிள் பயணம் அமைந்துள்ளது. இதில், தஞ்சாவூரில் இருந்து கடலூர் மாவட்டம் வீராணம், நாகை மாவட்டம் கோடியக்கரை, திரு வையாறு, திங்களூர் என மூன்று நாட்க ளில் 300 கி.மீ. தூரம் பயணம் செய்ய உள்ளோம். இந்த மூன்று நாள் பயணத்தில் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் பல்வேறு பாரம்பரிய இடங்களையும், சோழர் வரலாறு குறித்தும் பார்வை யிட்டு, பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்த உள்ளோம். எங்களது சுற்றுப் பயணத்துக்கு தமிழ்நாடு சுற்று லாத்துறை மிகவும் உறுதுணையாக உள்ளது’’ என்றார்.