districts

பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு

தஞ்சாவூர்,அக்.26 -   தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டையில் கடந்த 11 ஆண்டு களாக செயல்படாமல் கிடந்த தென்னை வணிக வளாகத்தை மேம்படுத்த 5.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே பொன்னவ ராயன் கோட்டையில் 22 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2011 ஆம் ஆண்டு, 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சேமிப்பு கிடங்குகள், தேங்காயை மதிப்புக் கூட்டும் பொருளாக இயந்திரம் மூலம் மாற்றுதல், கொப்பரையை தரம் பிரித்தல், ஏலம் விடும் அரங்கம், எண்ணெய் பிழியும் ஆலை ஆகிய வற்றை கொண்ட தென்னை வணிக வளாகம் அமைக்கப்பட்டது.  ஆனால் இந்த வணிக வளாகம் திறக்கப்பட்ட நாள் முதல், தற்போது வரை செயல்பாட்டுக்கு வராமல் போனதால், கட்டிடங்கள் சேதமாகியும், இயந்திரங்கள் வீணாகியும் போயின. இதனால் இந்தப் பகுதியில் உள்ள தென்னை விவசாயிகளின் நலனை  பாதுகாக்கக் கொண்டு வரப்பட்ட இந்த தென்னை வணிக வளாகம்  பயன்பாட்டுக்கு வராமலேயே வீணாகி வருகிறது என விவசாயி கள் வேதனை அடைந்தனர். இந்நிலையில், தென்னை வணிக வளாகம் ஏற்கனவே இருந்த ஏரியை  தூர்த்து கட்டப்பட்டதால், தென்னை  வணிக வளாகத்தை முழுமையாக அகற்றி விட்டு மீண்டும் ஏரியாக  மாற்றி தர வேண்டும் என விவசாயி கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநில திட்டக்குழு துணைத் தலைவர் டாக்டர் ஜெயரஞ்சன் மற்றும் உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனை மீண்டும் செயல் படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்  என தெரிவித்து, அதனடிப்படை யில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேம்பாடு மற்றும் சீரமைப்பு பணிகள்  நடைபெற்று வருகின்றன.  

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  செவ்வாய்க்கிழமை பட்டுக்கோட்டை  தென்னை வணிக வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு நடைபெறும் அடிப்படை கட்டமைப்பு, சீரமைப்பு பணி களின் விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வின் போது தஞ்சாவூர் மாவட்ட வேளாண் விற்பனை துணை இயக்குநர் (வணிகம்) மரியம் ரவி ஜெயக்குமார், வேளாண் விற்பனை துறை செய லாளர் மல்லிகா, கண்காணிப்பா ளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சித்தார்த்தன் ஆகியோர் உடனி ருந்தனர். இதுகுறித்து, வேளாண் விற்பனை துறை அதிகாரிகள் கூறு கையில், “பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர, 5.20 கோடி நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. இதன்  மூலம், அடிப்படை கட்டமைப்பை  மேம்படுத்தும் பணிகள் நடைபெறு கிறது. மேலும், தேங்காயிலிருந்து 5 வகையான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான தேங்காய் பால்,  தேங்காய் எண்ணெய், தேங்காய்  துருவல் பவுடர், குழந்தைகளுக் கான எண்ணெய், நார்ச்சத்து மாத்திரைகள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்பட உள்ளன.  தற்போது, முதல்கட்டமாக வணிக வளாகத்துக்கு வாகனங்கள்  வந்து செல்லும் வகையில் கான் கிரீட் சாலை, முள்வேலி ஆகியவை  அமைக்கப்படுகிறது. மேலும், ரூ.2.40 கோடி செலவில் 500 மெட்ரிக்  டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு  கிடங்கு, தேங்காய்களை இறக்கும்  வகையில் பிளாட்பாரம் ஆகியவை  அமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பியுள்ளோம். இந்த வளாகத்தில் கட்டப்பட்ட 27  கடைகளும் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், இங்கு குறைந்தது 100  பேருக்காவது வேலை வாய்ப்பு  கிடைக்கும் வகையில் நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது” என்றனர்.