districts

img

மயான கொட்டகைக்கு நிதி ஒதுக்கீடு: ஜவாஹிருல்லா எம்எல்ஏ அறிவிப்பு

பாபநாசம், மார்ச் 21- தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் இடையிருப்பு ஊராட்சி, நெடுஞ்  சேரி குடியானத் தெரு பகுதியில் மயான கொட்டகை அமைப்பதற்கான நிதியை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்குவதாக பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் எம்.ஹெச்.ஜவாஹி ருல்லா தெரிவித்துள்ளார்.  நெடுஞ்சேரி குடியானத் தெரு பகுதி யில் மயான கொட்டகை அமைக்கக் கோரி  அரசு அதிகாரிகளிடம் பலமுறை அப்பகுதி மக்கள் மனு அளித்திருந்தனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.  இந்நிலையில், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத்  தலைவர் கலைச்செல்வன் ஆகியோர் நெடுஞ்சேரி குடியானத் தெரு மயானத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் இப்பகுதியில், மயான கொட்  டகை அமைக்க தேவையான நிதியை சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்குவதாக சட்டமன்ற உறுப்பினர் ஜவா ஹிருல்லா தெரிவித்தார். இதற்கான பரிந்து ரையை மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பி னார்.

;