தஞ்சாவூர், ஜூன் 13- ஆட்சியர் உத்தரவிட்டும் மின் இணைப்பு வழங்கத் தயங்கும் மின்சார வாரிய அதிகாரி கள் செயல்பாடுகளால், கழுமங்குடா ஐஸ்வாடி கிராமம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மரக்காவலசை ஊராட்சிக்கு உட்பட்ட கழுமங்குடா ஐஸ்வாடி கிராமம் உள்ளது. கடற்கரையை ஒட்டிய இந்த கிராமத்தில், 30 குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட் டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீடுகளில் மின் இணைப்பு இல்லாததால், வீட்டில் உள்ள பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகள் இரவு நேரங்களில் பாடம் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வரு கின்றனர். மேலும், வீடுகளில் மின்விளக்கு இல்லாததால் தொலைக்காட்சி பார்க்க முடியா மலும், செல்போன் சார்ஜ் போட முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து தீக்கதிர் உள்ளிட்ட பல்வேறு நாளிதழ்கள், தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதையடுத்து கடந்த சில நாட்க ளுக்கு முன்பு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஐஸ்வாடி பகுதி யைப் பார்வையிட்டு உடனடியாக மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டார். இந்நிலையில், அதிகாரிகள் அறிவுறுத்த லின் பேரில் மீனவர்கள் ஒவ்வொருவரும் 5,000 முதல் 10,000 ரூபாய் வரை செலவு செய்து, தங்கள் வீடுகளுக்கு மின் சாதனங்களை பொருத்தி விட்டு மின் இணைப்புக்காக தயா ராக காத்திருந்தனர். தற்போது மீன்வளத் துறை அதிகாரிகள் தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை எனக் கூறி மின்சார வாரி யத்தின் மின் இணைப்பு வழங்காமல் உள்ள னர். மின்துறை அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகளையும், மீன்வளத்துறை அதிகாரி கள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளையும், ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி மன்றத் தலை வரையும் என மாறிமாறி கை காட்டுகின்ற னர். இதனால் மின் இணைப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இதனால் மீண்டும் இருளில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சியர் உத்தரவிட்டும், அதனை காற்றில் பறக்க விட்டு, அரசுத்துறை அதிகாரிகள் தங்களை அலைக்கழிப்பதாக இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.