தஞ்சாவூர், மார்ச் 7- வேளாண்மை உழவர் நலத் துறை சார் பில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 50 சதவீத மானிய விலையில் பண்ணைக் கருவிகள், பேட்டரி ஸ்பிரேயர், இனக்கவர்ச்சி பொறி, சான்று பெற்ற உளுந்து விதை, தார்ப்பாய் வழங்கும் நிகழ்ச்சி, பேராவூரணி ஒருங்கி ணைந்த வேளாண்மை விரிவாக்க மையத் தில், வேளாண் உதவி இயக்குனர் (பொ) எஸ்.ராணி தலைமையில் நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என். அசோக்குமார் கலந்து கொண்டு விவசாயி களுக்கு இடுபொருட்கள் மற்றும் வேளாண் கருவிகளை மானிய விலையில் வழங்கி னார். பேராவூரணி ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, பேராவூரணி பேரூராட்சித் தலைவர் சாந்தி சேகர், வேளாண் உதவி அலுவலர்கள் கே. கோகிலா, பி.தீபா, கே.கார்த்திகேயன், ஜி. கவிதா, எம்.ரேவதி, பி.வர்ஷா, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பொன்.செல்வி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.