பாபநாசம், ஜன.9- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை, இதன் சுற்று வட்டாரப் பகு திகளில் தயாரிக்கப்படுகிற அச்சு வெல்லத் துக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்று அச்சு வெல்லம் தயாரிப்பில் ஈடு பட்டுள்ள கரும்பு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டுச் சென்றதுடன், சட்டமன்றத்திலும் இது தொடர்பான கோரிக்கையை முன்னெ டுத்ததன் பயனாக தமிழகத்திலே முதன் முறையாக பாபநாசம் ஒழுங்குமுறை விற்ப னைக் கூடத்தில் அச்சு வெல்லத்தை ஏலம் விட ஏற்பாடு செய்த பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா-விற்கு பாபநாசம் காவிரி பாசன கரும்பு விவசாயி கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.