districts

img

யோகா போட்டியில் வென்ற ஆபிதீன் பள்ளி மாணவர்கள்

பாபநாசம், நவ.3- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத்துறை ஆபிதீன் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஆபிதீன் ராகுல்,  கனிஷ்கா, பிரகதீஸ்வரன் உள்ளிட்ட 26 மாணவர்கள் தஞ்சா வூரில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டியில் பங்கேற்றனர்.  இதில் 2 மாணவர்கள் முதல் பரிசையும், 2 மாணவர்கள் இரண்டாம் பரிசையும், 21 மாணவர்கள் மூன்றாவது பரிசை யும் பெற்றனர். போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர் களுக்கு ஷீல்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற  மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பாராட்டினர்.