districts

img

தாறுமாறாக ஓடிய சிற்றுந்து மோதி சிறுவன் காயம்: வாகனங்கள் சேதம்

தஞ்சாவூர், ஏப்.1-  தஞ்சாவூர் அய்யாசாமி வாண்டையார் நினைவு பழைய பேருந்து நிலையத்தி லிருந்து மருத்துவக்கல்லூரி நோக்கி தனியார் சிற்றுந்து புறப்பட்டது. சிற்றுந்தில் 20க் கும் அதிகமான பயணிகள் பயணம் செய்தனர். மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜி நகர் பகுதி யில் சென்ற இந்தச் சிற்றுந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி,  சாலையோரம் நிறுத்தப்பட்டி ருந்த 15 இரு சக்கர வாகனங்  கள், மின் கம்பம், கார் மீது  மோதி நின்றது. இதனால்,  வாகனங்கள் சேதமடைந் தன. மின் கம்பமும் சாய்ந்தது. மேலும், சாலையோரம் நின்று கொண்டிருந்த சிறு வன் பலத்த காயமடைந்தார்.  இவரை தவிர சிலர் லேசான  காயமடைந்தனர். இவர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து நகரப் போக்கு வரத்து புலனாய்வு காவல் பிரிவினர் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.