districts

img

நெற்றியில் பெரிய கட்டி: அவதிப்படும் சிறுவன் சிகிச்சைக்கு அரசு உதவி செய்ய வேண்டுகோள்

அய்யம்பேட்டை, டிச.21- தலையில் பெரிய கட்டியுடன் அவதிப் படும் சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு உதவ வேண்டி அரசுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே சோமேஸ்வரபுரம் மேலத் தெருவை  சேர்ந்தவர் வாசுதேவன்-பூஜா தம்பதி. கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு ஆதேஷ் (5), அனிருத் (2) ஆகிய இரண்டு  ஆண் குழந்தைகள் உள்ளனர்.  ஆதேஷ் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய  தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பிறந்தது முதல் நெற்றியில் பெரிய கட்டியுடன் உள்ளார். கைக் குழந்தையாக இருக்கும்போதே இவ ருக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்து வமனையில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. ஆனாலும் கட்டி அப்படியே உள் ளது. இந்த கட்டியை அகற்றுவதற்கு அதே தனியார் மருத்துவமனையில் ரூ.5 லட்சம்  வரை செலவாகும் என மருத்துவமனை நிர் வாகம் தெரிவித்துள்ளது.  இதற்கிடையே சிறுவனின் தந்தை வாசு தேவன், கடந்தாண்டு நிகழ்ந்த விபத்தில் சிக்கி தற்போது கால் சரிவர நடக்க முடி யாமல் உள்ளார். எனவே சிறுவனின் மருத்  துவ சிகிச்சைக்கு அரசு உதவி செய்ய வேண்  டும் என சிறுவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “எங்களது மகனின் மருத்துவ சிகிச்சைக் காக ஏற்கனவே வீட்டிலிருந்த நகைகளை எல்லாம் அடமானம் வைத்து விட்டோம். எங்களது குடிசை வீட்டையும் அடமானம் வைத்துள்ளோம். தற்போது ரூ.5 லட்சம் வரை செலவாகும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மருத்துவ உதவி வேண்டி தமிழக முதல மைச்சரின் தனிப் பிரிவிற்கும், தஞ்சை ஆட்சி யருக்கும் ஏற்கனவே கோரிக்கை மனுக்கள் அனுப்பி உள்ளோம். எனவே தனியார் மருத்துவமனையில் மகனுக்கு மருத்துவ சிகிச்சை பெற உதவ வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

;