districts

img

40 ஆண்டு காலப் போராட்டம் இருளர், ஆதியன்குடி குடும்பங்களுக்கு சாதிச் சான்றினை ஆட்சியர் வழங்கினார்

கும்பகோணம், அக்.27- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் பேரூராட்சி, மகாராஜ புரம் ஊராட்சியில் உள்ள பனங்குடம் கிரா மத்தில் வசிக்கும் 31 குடும்பங்களைச் சேர்ந்த 105 இருளர் பழங்குடி இன நபர் களுக்கு சாதி சான்றிதழ்களை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்வி களுக்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ‘‘தஞ்சா வூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்ற னர். மேலும் பட்டுக்கோட்டை பகுதியில் ஆதியன்குடி என்ற பழங்குடி இன மக்க ளும் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக தங்களுக்கு பழங்  குடி இன சாதி சான்றிதழ் வேண்டுமென கோரிக்கைகள் விடுத்து வந்த நிலையில், தற்போது தமிழக அரசு இவர்களுக்கு பழங்குடி இன மக்களுக்கான சாதி   சான்றி தழ்கள் வழங்கி வருகிறது’’ என்றார் மேலும் கும்பகோணம் அருகே உள்ள  மகாராஜபுரம் ஊராட்சியில் உள்ள பனங்குடம் கிராமத்தில் வசித்து வரும் 31 குடும்பங்களை சேர்ந்த 105 இருளர் இன நபர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப் பட்டது என தெரிவித்தார். நிகழ்வில் கோட்டாட்சியர் லதா, திரு விடைமருதூர் வட்டாட்சியர் சுசீலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்குழலி, சூரிய நாராயணன், ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி இளங்கோவன், ஊராட்சி செயலர் ராமதாஸ், விஏஓ வெங்கடேஷ், வருவாய் ஆய்வாளர் அனுப்பிரியா உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.