தஞ்சாவூர், அக்.13- ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும், பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உத்தர விட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதும், பயன் படுத்துவதும் கூடாது, மாற்றுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என வணிக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப் பட்டது. இந்நிலையில், பட்டுக்கோட்டை நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப் படுகிறதா என, நகராட்சி ஆணையர் சௌந்தரராஜன் தலைமையில் வியாழனன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில், பழனியப்பன் தெரு, அறந்தாங்கி முக்கம், வடசேரி சாலை, பெரிய தெரு ஆகிய இடங்களில் பிளாஸ் டிக் பொருட்கள் மொத்த விற்பனை கடைகளில் முதற் கட்டமாக சோதனை நடத்தப்பட்டது. இதில் விற்ப னைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ எடை யுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டன. மேலும், இரண்டு கடைகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் அப ராதமும், ஒரு கடைக்கு ரூ.10 ஆயிரம், மற்றொரு கடைக்கு ரூ.5 ஆயிரம் என, மொத்தம் ரூ.45 ஆயிரம் அபராத மாக விதிக்கப்பட்டது.