districts

பெண் தீக்குளித்து தற்கொலை - போலீசார் விசாரணை

இளம்பிள்ளை, ஜன.6- இளம்பிள்ளை அருகே இளம்பெண் தீக்குளித்து   தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீ சார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட  ஆர்எஸ்பி சித்தப்ப செட்டியார் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். விசைத்தறித் தொழிலாளியான இவருக்கு மனைவி யசோதா (31 ) மற்றும் 2 பெண் குழந்தைகள்  உள்ள னர். இந்நிலையில், திங்களன்று வீட்டில் இருந்த யசோதா,  குழந்தைகளை வெளியே அனுப்பி விட்டு திடீரென உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில்,  யசோதா சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். இத்தகவலறிந்து வந்த மகுடஞ்சாவடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், யசோதாவின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் குடும்பப் பிரச்சனையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;