tamilnadu

பாளை 3 பேர் கொலையில் கைதானவர் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர்.... மருத்துவச் சோதனையில் தெரிந்தது

திருநெல்வேலி:
பாளையங்கோட்டை மகாராஜ நகர் பகுதியில் திருநங்கைகள் உட்பட 3 பேர்கொலையில் கைதான நபரை மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர், பெண் ணாக பிறந்து ஆணாக மாறியவர் என்பது தெரியவந்தது.பாளையங்கோட்டை மகாராஜ நகர் முனிசிபல் காலனியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் சேலம் அருகேயுள்ள கண்ணன்குறிச்சியை சேர்ந்த ரிஷிகேஷ் (34), அவரது கூட்டாளி ஸ்னோவின், செல்லத்துரை ஆகியோர் நெல்லையை சேர்ந்ததிருநங்கைகள் அனுஷ்கா, பவானி மற்றும்
முருகன் என்பவரை கொலை செய்தனர். 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்னோவின், செல்லத்துரை ஆகியோர் நாங்குநேரி கிளை சிறையில் கடந்த 22ம் தேதி அடைக்கப்பட்டனர். ரிஷிகேஷ்க்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவபரிசோதனையில் டாக்டர்கள் குழுவினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து முழு மருத்துவ பரிசோதனை நடத்திய நெல்லை அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். ரிஷிகேஷ் கடந்த 15 வயது வரை ஜாலியா என்றபெயரில் பெண்ணாக இருந்து மகளிர் புள்ளிக்கு சென்று வந்துள்ளார். பின்பு அவரது உடலில் ஆண் தன்மையுடைய ஹார்மோன் சுரப்பிகளால் ஏற்பட்ட மாற்றத்தால்சிறிது, சிறிதாக ஆணாக மாற துவங்கினார். இதனால் தற்போது அவர் ஆண்களுக்குஉண்டான உடல்நிலை வளர்ச்சியடைந் துள்ளார். இதனால் அவர் 70 சதவீதம் ஆண்தன்மை உடையவர் என மருத்துவ அறிக்கையை டாக்டர்கள் குழுவினர் போலீசாரிடம் சமர்ப்பித்தனர். இதனையடுத்து போலீசார், நெல்லை குற்றவியல் நீதித்துறைநடுவர் நீதிமன்றம் நீதிபதி பாபுவிடம் மருத்துவ குழுவினரின் அறிக்கைகளை அளித்து,ரிஷிகேஷை ஆஜர்படுத்தினர். அவரது உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் ரிஷிகேஷை அடைத்தனர்.

;