சேலம் மாவட்டம், அயோத்தியா பட்டணம் தாலுகா, முட்டை கடை காலனி பொதுமக்கள் வீட்டு மனைப் பட்டா, அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை சாலையில் வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.