districts

img

இந்தியாவுடன் தொழில்நுட்பத்தை பரிமாறிக் கொள்ளத் தயார் கியூபா துணை தூதர் பேச்சு

சேலம், செப்.9- இந்தியாவுடன் தொழில்நுட் பத்தை பரிமாறிக் கொள்ள கியூபா தயாராக உள்ளது என வேளாண்மை துறை சர்வதேச கருத்தரங்கில் அந்நாட்டின் துணை தூதர் ஆபேல் டெஸ் பெய்ஜின் தெரிவித்தார். சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் வேளாண்மை துறை சார்பாக 5 ஆவது சர்வதேச கருத்  தரங்கம் நடைபெற்றது. இதில், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பேசுகையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொழில் முனைவோரை உரு வாக்குவதற்கான அனைத்து வசதி வாய்ப்புகளையும் வேளா ண்மை துறை சிறப்பாக செயல் படுத்தி வருகிறது என்றார். அத்துடன், இக்கருத்தரங் கின் மூலமாக வெளியிடப்படும் அனைத்து ஆய்வுக் கட்டுரை களின் சிறப்புகள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். தமிழக அரசாங்கம்  தொழில் முனைவோர்களுக்கு வழங்கி வரும் சலுகைகள், கடன் உதவிகள் பற்றிய விழிப்புணர்வு சிந்தனைகள் குறித்தும் தெரி வித்தார். இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கியூபா நாட்டின் துணை தூதர் ஆபேல் டெஸ்  பெய்ஜின் கலந்து கொண்டு, கியூபா நாட்டின் தொழில் அனு பவத்தையும், தொழிலின் முக்கி யத்துவத்தை பற்றியும் எடுத்துக் கூறினார். மேலும், இந்தியாவிற் கும், கியூபா நாட்டிற்கும் உள்ள  நட்புணர்வையும், இதன் மூலம் நடைபெற்றுக் கொண்டுள்ள ஏற்றுமதி தொழிலின் முக்கி யத்துவத்தை பற்றியும் தெளி வாகக் கூறினார். கியூபா இந்தி யாவோடு தொழில்நுட்பத்தை பரி மாற்றிக் கொள்வதற்கும், ஆரா ய்ச்சி சம்பந்தமான தகவல்களை மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்களிடம் பரிமாற்றிக் கொள்வதற்கும் தயாராக உள் ளது எனவும் தெரிவித்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் உள்ள பொருளாதாரக் கல்லூரி யின் இணைப்பேராசிரியர் தமி ழரசு, கிருத்திகா பைப்ஸ் மேலா ண்மை இயக்குநர் ராஜேஸ்வ ரன் சேலம் பெரியார் பல்கலைக்  கழக மேலாண்மை துறையின் இணை பேராசிரியர் யோகானந் தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;