districts

img

ரயில் கட்டணத்தை குறைத்தது பாஜகவின் தேர்தல் நாடகம்

சேலம், பிப்.28 - “பயணிகளின் தேவையை அறிந்து ரயில்வே நிர்வாகம் சேவை செய்ய வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் நிறை வேற்றப்படவில்லை. இப்போது பாசஞ்சர் ரயில் கட்டணத்தை குறைத்து இருப்பது பாஜகவின் தேர்தல் நாடகம்” என ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில்கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் குற்றம்சாட்டினார்.

சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனை குழு கூட்டம் கோட்ட  மேலாளர் பங்கஜ் குமார் சிங்கா  தலைமையில் புதனன்று நடை பெற்றது. கூட்டத்தில் சேலம் கோட்ட த்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங் களை சேர்ந்த நாடாளுமன்ற மாநி லங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், “சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் பயணிகளின் தேவையை அறிந்து சேவை செய்ய வேண்டும். குறிப் பாக கோவை மாவட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. வடமாநிலத்தில் இருந்து வரும் ஆறு விரைவு ரயில்களை கோவை யை புறக்கணித்து பீளமேடு, போத்த னூர் வழியாக இயங்குகிறது. இத்திட்டத்தை கைவிட வேண்டும்,

பொள்ளாச்சி -திண்டுக்கல் அகல ரயில் பாதையில் கோவையில் இருந்து தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, நாகர் கோவில், தூத்துக்குடி, இராமநாத புரம், இராமேஸ்வரம் பகுதிகளுக்கு இரவு நேர ரயில்களை இயக்கிட வேண்டும். கோவையிலிருந்து பெங்களூருக்கு இரவு நேர ரயில் களை இயக்கிட வேண்டும். நக ரத்தின் நெரிசலைக் குறைக்கவும், பயணிகளின் தேவையை அறிந்தும், சிங்காநல்லூர், பீளமேடு ரயில் நிலையங்களில் கோவை வந்து செல்லும் ரயில்களை நிறுத்திட வேண்டும்.

கோவை மேட்டுப்பாளை யம் வழித்தடத்தை இருவழிப் பாதையாக மாற்றிட வேண்டும். இப்படி பயணிகள் தேவை அறிந்து நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். ஆனால், இக்கோரிக்கைகள் நிலு வையிலேயே இருக்கின்றன. இப் போது தொலைதூர ரயிலுக்கு கட்ட ணத்தை குறைக்காமல், பாசஞ்சர் ரயிலுக்கு மட்டும் கட்டண குறை ப்பு என்பது பாஜகவின் தேர்தல் நாடகம். இது அப்பட்டமாக தெரிகிறது.  அதேபோன்று, பயணிகள் வரத்து குறைவு என்பதால் ரயில் களை ரத்து செய்யும் நடவடிக்கை யை ரயில்வே நிர்வாகம் நிறுத்த வேண்டும்.

அப்படி நிறுத்தினால் கோவையில் இருந்து பெங்களூர் செல்லும் வந்தே பாரத் ரயில்  குறைந்த பயண எண்ணிக்கை யிலேயே செல்கிறது. அதனை உங் களால் நிறுத்தி விட முடியுமா?” என காரசாரமாக கேள்வி எழுப்பினார்.  இதேபோன்று, நாமக்கல் - ஏ.கே.பி.சின்ராஜ் எம்பி., தருமபுரி - டாக்டர் எஸ்.செந்தில்குமார் எம்பி.,  கிருஷ்ணகிரி - டாக்டர் எ.செல்ல குமார் எம்.பி., மற்றும் மாநிலங் களவை உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோர் ரயில்வே பயணிகள் சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.