districts

img

பட்டபகலில் வழக்கறிஞர் வீட்டில் கொள்ளை - போலீசார் விசாரணை

இளம்பிள்ளை, ஜன. 1- மகுடஞ்சாவடி அருகே பட்டப்பகலில் வழக்கறிஞர் வீட்டில் 25 சவரன் தங்க நகைகள் மற்றும் 75 ஆயிரம் ரொக்கப் பணம்  கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட மகுடஞ்சாவடி அருகே உள்ளது குப்பாண்டிபாளை யம். இப்பகுதியைச் சேர்ந்த  மாரிமுத்து என்பவர் வழக் கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் டிச.30 ஆம் தேதியன்று மாரிமுத்து சொந்த வேலைக்கு செல்ல, அவரது மனைவி கலா துக்க நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றுவிட்டார். பின்னர், வீடு திரும்பிய கலா வந்து பார்த்தபோது முன்கதவின் பூட்டு உடைக் கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 25 சவரன் தங்கம் நகை மற்றும் ரூ. 75 ஆயிரம் ரொக்கப் பணம் திருடு போனது தெரியவந்தது. இதைகண்டு, அதிர்ச்சி அடைந்த கலா  கணவர்  மாரிமுத்திற்கு தகவல் தெரி வித்தார். இதையடுத்து, மகுடஞ்சாவடி காவல் நிலை யத்தில் மாரிமுத்து புகார் அளித்ததார். இப்புகாரின்பேரில் விரைந்து வந்த போலீசார் கைரேகை நிபுணர்களுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். பூட்டிய வீட்டில் பட்டப் பகலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம்  அப்பகுதி யில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி யுள்ளது.

;