சேலம், ஜன.29- சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொது மக்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திரு மாவளவன் எம்.பி., அறக்கட்டளை சார்பில் 60 பயனாளிக ளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம், பொன்னம்மாபேட்டை பகுதியில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கார்பெட் சிலம்பு தலைமை வகித் தார். இதில், சேலம் மாநகராட்சி, 34 ஆவது வார்டு உறுப்பி னர் ஈசன் இளங்கோ, சமூக சேவகர் கி.காயத்ரி ஆகியோர் பய னாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டையை வழங்கி னர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் ரத்தப் பரி சோதனை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை செய்யப் பட்டது. மேலும், பலருக்கு கண் கண்காடி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில், விசிக மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு செயலாளர் சௌ.பாவேந்தன், தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஜானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.