சேலம், ஜூன் 13- புறம்போக்கு இடங்களில் வசிப் பவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி சேலத்தில் திங் களன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்டனர். அரசு புறம்போக்கு நிலங்கள், பயன்படுத்தாத நீர்நிலைகளில் குடி யிருக்கும் பொதுமக்கள் அனை வருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். குடியிருப்பு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். குடியிருப்புக ளுக்கு மின் இணைப்பு, வரி ரசீது வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஎம் கிழக்கு மாநகர செயலா ளர் பொன்.ரமணி தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் மாவட்ட செயலாளர் மேவை.சண் முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, பி.ராமமூர்த்தி, எம்.குணசேகரன், ஐ.ஞானசவுந்தரி உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் திரளா னோர் கலந்து கொண்டனர். முன்ன தாக மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர்.