சேலத்தில் முதியோர் உதவித்தொகை வழங்க லஞ்சம் பெற்ற வங்கி ஊழியரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு தமிழக அரசின் சார்பில் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித்தொகைகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் இந்த உதவித்தொகைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலத்தில் பல்வேறு பகுதிகளில் 1500-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஓய்வூதியம் வராத நிலையில், இன்று அவர்களுக்கு ஓய்வூதியம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதனையறிந்து கொண்ட முதியோர்கள் சத்திரம் பகுதியில் உள்ள கனரா வங்கிக்கு படையெடுத்தனர்.இதனையடுத்து, சத்திரம் கனரா வங்கியில் இருந்த ஊழியர் ஒருவர் முதியோர் உதவித்தொகை வழங்க ரூ.50 லஞ்சம் பெற்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைராகியுள்ளது.