ஓட்டுநர் தினத்தை இனிப்புகள் வழங்கி ஆட்டோ ஓட்டுநர்கள் கொண்டாடினர்.
நாடு முழுவதும் ஜூன்.1-ஆம் தேதி ஓட்டுநர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி ஓட்டுநர் தினத்தை கொண்டாடினர்.
மக்களின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக பணியாற்றி வரும் ஓட்டுநர்களுக்கு அரசு அனைத்து விதமான சலுகைகளும் வழங்க வேண்டும் எனவும், ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ஆட்டோக்கள் மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக பயன்படுகிறது எனவும் தெரிவித்தனர்.
ஆட்டோவை ஓட்டும் ஆட்டோ தொழிலாளர்களை காவல்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகளால் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர் எனவும், குறிப்பாக அவமானப்படுத்தப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினர்.
அரசின் சார்பில் அதிக கட்டணங்கள் வசூலிக்கபட்டு வருவதாகவும், ஒன்றிய, மாநில அரசுகள் இன்சூரன்ஸ் மற்றும் எப்சி கட்டணங்கள் சாலைவரிகளை குறைக்க வேண்டும், முழுமையாக வாகனங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர் . சேலம் ஜங்ஷன் பகுதியில் ஆட்டோ சங்க செயலாளர் உதயகுமார் தலைமையில் பேட்ஜ் அணிந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் திரளான ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சார்பில் ஓட்டுநர்கள் பேட்ச் அணிந்து பேருந்துகளை இயக்கினர்.