சேலம்,அக்டோபர்.08- வலி மாத்திரைகளை ஆன்லைனில் வாங்கி போதை மாத்திரை என விற்பனை செய்த செல்வராஜ் என்பவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.
சேலம் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செங்காணுறை சேர்ந்தவர் செல்வராஜ் இவர் ஆன்லைனில் வலி மாத்திரைகளை வாங்கி அதை போதை மாத்திரைகள் என இளைஞர்களிடம் விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்த மாத்திரைகளை வாங்கும் வாலிபர்கள் அதிக போதைக்காக மாத்திரைகளைத் தண்ணீரில் கரைத்து அதனை ஊசி மூலம் நரம்பில் ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இளைஞரிடம் நடத்திய விசாரணையில் கடந்த செப்டம்பர் 22இல் செல்வராஜ், அவரின் கூட்டாளிகளான ஓமலூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் வட்ட முத்தம் பட்டியைச் சேர்ந்த மணிவாசகம் ஆகியோரை இரும்பாலை போலீசார் கைது செய்து சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.