திரும்பெரும்புதூர் ஒரகடத்தில் என்எஸ்கே பேரிங்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிஐடியு சங்கம் அமைத்ததற்காக நிர்வாகம் மேற்கொண்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், ஊதிய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி மார்ச் 11 முதல் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.