districts

img

தொழிலாளர்களுக்கு 5 தேதிக்குள் ஊதியம்: தாம்பரம் மாநகராட்சி ஆணையர் உறுதி

சென்னை,நவ.23- தற்காலிக, ஒப்பந்த முறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு மாதந்தோறும் 5ந் தேதிக்குள் ஊதியம் வழங்கப்படும் என்று தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உறுதி அளித்துள்ளார். தாம்பரம் மாநகராட்சியில் 1200 க்கும் மேற்பட்ட  தற்காலிக, ஒப்பந்த  தூய்மை தொழிலாளர்கள், அம்மா உணவகம், அம்மா குடிநீர், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணி யாற்றுகின்றனர். இவர்களுக்கு முறை யாக குறிப்பிட்ட தேதியில் ஒப்பந்த தாரர்கள் ஊதியம் வழங்குவதில்லை. அடையாள அட்டை கூட இல்லாமல் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், உள்ளாட்சிகளில் உள்ள 20 வகையான நிரந்தர பணியிடங்களை தனியார் மயமாக்கும் அரசாணை 152ஐ எதிர்த்து நவ.22 தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். தாம்பரம் மாநகராட்சி தொழிலாளர் சங்கம்  சார்பில், மாநகராட்சி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தொழிலாளர்கள் அலுவலகத்திற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதன் காரணமாக மாநகராட்சி ஆணையர் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டார். இதன்படி, ஆணையர் இளங்கோ வன், முதன்மை சுகாதார அலுவலர்  பார்த்திபன் உள்ளிட்ட அதிகாரிக ளுடன், சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.அன்பழ கன், உள்ளாட்சி ஊழியர் சங்க நிர்வாகிகள் கே.சி.முருகேசன், என்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.அப்பனு, எஸ்.குமாரதாசன், ராஜன்மணி, ரவிச்சந்தி ரன், சுகந்தி, சாந்தி, குழந்தைசாமி, மனோகரன் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சு வார்த்தையில் தொழிற்சங்கம் தரப்பில்  பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன. இதில், மாதந்தோறும் 5ந் தேதி ஊதியம் வழங்கப்படும். ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை தருவதோடு, அனைத்து தொழிலாளர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒரு ஷிப்ட் முறை அமல்படுத்தி, இஎஸ்ஐ, இபிஎப் தரப்படும். பெண் தொழிலாளர்க ளுக்கு உடை மாற்றும் அறை மற்றும் கழி வறை வசதி ஏற்படுத்தி தரப்படும். மாவட்ட ஆட்சியர் அறிவிக்கும் ஊதியம்  அனைத்து ஒப்பந்த தொழிலாளர்க ளுக்கும் வழங்கப்படும். அனைத்து மண்டலங்களிலும் துணை ஆணையர், ஏஎச்ஓ, துணை  பொறியாளர்கள் நியமிக்கப்படு வார்கள். சுகாதார அலுவலர் பணியிடங் கள் நிரப்பப்படும்.அம்மா குடிநீர்  பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்க ளுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளதை, கணக் கிட்டு உடனடியாக வழங்கப்படும். நிரந்தர தொழிலாளர்கள் அனை வருக்கும் பணிப்பதிவேடு பராமரிக் கப்படும். பணிப்பதிவேடு இல்லாத தொழிலாளர்கள் உடனடியாக மனு செய்ய வேண்டும். பணிக்காலத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசு களுக்கு வேலை வழங்க முன்னுரிமை  வழங்கப்படும். அம்மா உணவகங்க ளில் வேலை செய்யும் தொழிலாளர் களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை  தரப்படும். ஓய்வூதியம் வழங்குவதில் உள்ள காலதாமதம் சரி செய்யப்படும். மகளிர் சுய உதவிக்குழு மூலம் மாநக ராட்சி பணியில் ஈடுபடும் தொழிலா ளர்கள் இபிஎப் தொகை செலுத்தி யுள்ள நிலையில், நிர்வாகம் செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்தும் என ஆணையர் உறுதி அளித்தார். மேலும், அரசாணை 152ஐ ரத்து செய்வது, ஒப்பந்தம் உள்ளிட்ட பிரிவு களில் பணியாற்றும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது, கொரோனா கால நிவாரணம் போன்றவை குறித்து தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.