வேலை நிறுத்தங்களை நோக்கி தொழிலாளர்கள் தள்ளப்படுகின்றனர்
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேட்டி
சென்னை, ஆக.5 - வேலை நிறுத்தங்களை நோக்கி தொழிலாளர்கள் தள்ளப்படுகின்றனர் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார். பணி நிரந்தரம் கோரி சென்னை பெருநகர குடி நீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தொழி லாளர்கள் திங்களன்று (ஆக.5) ஆர்ப்பாட்டம் நடத்தி னர். அப்போது செய்தி யாளர்களிடம் அ.சவுந்தர ராசன் கூறியதாவது: குடிநீர் வழங்குவது, கழிவு நீரகற்றுவது, சுகா தாரப் பணிகளை எந்த நிலையிலும் அரசு தனி யாருக்கு கொடுக்க கூடாது. அவ்வாறு கொடுத்த நாடுகள் மிகப்பெரும் சங்கடத்திற்கு உள்ளாகி உள்ளன. குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் 10ஆயிரம் பேர் பணி யாற்றிய இடத்தில் தற்போது 4 ஆயிரம் பேர்தான் உள்ளனர். தொழி லாளர்கள் மீது கடுமை யான பணிச்சுமை திணிக்கப்படுகிறது. இந்த தொழிலாளர்களில் பலர் அன்றாட கூலிகளாக உள்ள னர். 480 நாட்கள் பணியாற்றி னால் நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை ஆட்சியாளர்களும், பொதுத் துறை நிறுவனங்களும் மீறுகின்றன. இதனை எதிர்த்து வழக்கு தொடுத்தால், சட்டம் மீறப்பட்டுள்ளது என்று தொழிலாளர்த்துறை தீர்ப்பு அளிகிறது. காலதாமதம் செய்வதற்காகவே அந்த தீர்ப்புகளை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்கிறார்கள். கான்ட்ராக்ட், கேசுவல், பயிற்சியாளர் என்ற எந்தப் பெயரிலும் நிரந்தரப் பணி களில் ஈடுபடுத்தக் கூடாது. அவ்வாறு ஈடு படுத்தி இருப்பவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தேர்தல் அறிக்கையில் கூறியபடி 10 ஆண்டுக்கு மேல் பணியாற்றும் தொழி லாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு அறிவித்த குறைந்தபட்ச கூலியை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். 2003க்கு பிறகு பணியில் சேர்ந்த வர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நகரம் நாறிவிடும் மக்களுடைய அடிப்படை தேவையான தொழிலில் இருப்பதால், சகித்துக் கொண்டு வேலை செய்கிறோம். இதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் நல்வாழ்வு சமபந்தப்பட்ட இந்த தொழிலில் ஒரு நாள் வேலைநிறுத்தம் நடந்தால் கூட நகரம் நாறி விடும். குடிக்கிற தண்ணீரை பராமரித்து கொடுக்கா விட்டால் மிகப்பெரிய சுகா தார கேடு ஏற்பட்டுவிடும். பொறுப்போடு செயல்படும் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தை நோக்கி ஆட்சியாளர்கள் தள்ளு கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேல்முறையீடுகளை திரும்பப் பெறுக
போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் வாரியம் போன்ற இடங்க ளில் நீதிமன்றம் தொழிலாளர்களுக்கு சாதகமான தீர்ப்பு கொடுத்த பிறகும், அரசு மேல்முறையீட்டுக்கு செல்கிறது. ‘தொழிலாளிக்கு ஆதரவாக வந்த தீர்ப்பை எதிர்த்து, எந்த சூழ்நிலையிலும் அப்பீல் செய்யும் கீழ்த்தர மான வேலையை செய்ய மாட்டேன்’ என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறினார். அதற்கு மாறாக இந்த அரசு செயல்படுகிறது. எனவே, தொழிலாளர்களுக்கு எதிரான அனைத்து வகையான மேல்முறையீடுகளையும் திரும்பப்பெற வேண்டும்.
முன்னாள் அமைச்சர் மீதான வழக்கில் விரைவில் தீர்ப்பு
சென்னை, ஆக. 5- கடந்த 2022 ஆம் ஆண்டு திண்டிவனத்தில் நடந்த ஒரு போது கூட்டத்தில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம். முதலமைச்சர் குறித்து அவதுறாக பேசினார். இதையடுத்து அவர்மீது நடவடிக்கை எடுக்கு மாறு திமுக பிரமுகர் காவல் துறையில் புகார் அளித்தார். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் போன்ற பிரிவு களில் வழக்கு பதிவு செய்யப் பட்டது. இதைபோல் முன்னாள் அமைச்சர் ஜெயக் குமார் கைதை கண்டித்து அனுமதின்றி போராட்டம் நடத்தியதாக அழிக்கப்பட்ட புகாரின் பேரிலும் சி.வி.சண்முகம் எதிராக ஒரு வழக்கு பதிவு செய்யப் பட்டது. இந்த இரண்டு வழக்கு களையும் ரத்து செய்ய வேண்டும் என சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதன் மீதான தீர்பை நீதிபதி ஜெய சந்திரன் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.
மின்சார ரயில்கள் ரத்து ஜிஎஸ்டி சாலையில் நெரிசல்
தாம்பரம், ஆக.5- தாம்பரம் ரயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் காரணமாக சனிக்கிழமை முதல் வரும் 14ம் தேதி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் பகல் மற்றும் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும் மற்றும் இரவு 10 மணி முதல் 11.59 மணி வரையும் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லா வரம் ரயில் நிலையம் வரையும், அதே போல செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து வந்த பயணிகளுக்கு ரயில் சேவை ரத்து குறித்த தகவல்கள் சரியாக தெரியாததால், அவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதோடு தாம்பரம் பேருந்து நிலையத்தில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகளவில் காணப் பட்டதால், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. தாம்பரம் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் அனைவரும் தாம்பரம், இரும் புலியூர் பேருந்து நிலையம், இந்து மிஷன் மருத்துவமனை பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களை பயன்படுத்திக்கொள்ளுமாறும் ஏற்கெனவே அறிவுறுத்தப் பட்டிருந்தது. இருப்பினும், இதுகுறித்து தகவல் தெரியாத வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்த பயணிகளுக்கு அவர்கள் செல்லும் இடங்கள் குறித்து கேட்டு எவ்வாறு செல்ல வேண்டும், எந்த பேருந்தில் பயணிக்க வேண்டும் என பணியில் இருந்த போலீசார் ஆலோசனைகள் வழங்கி உதவி செய்தனர்.