சென்னை, பிப்.8- பெண் தொழில் முனை வோர் என்ற தலைப்பில் சமூக பிரச்சினைகள், சவால்கள் மற்றும் வெற்றி விகிதம் பற்றிய கருத்தரங்கத்தை சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் கல்லுரி மற்றும் சிமாட்ஸ் புத்தாக்கப் பிரிவுடன் இணைந்து நடத்தியது. இக்கருத்தரங்கில் பேசிய ,செங்கல்பட்டு மாவட்ட மதுராந்தகம் துணைக் காவல் கண்காணிப்பாளர் எஸ். மணிமேகலை, பல்வேறு சவால்களையும் சமூக பிரச்சினைகளையும் எதிர்கொண்டு ஒரு பெண் தொழில்முனைவோர் எப்படி வெற்றிபெறவேண்டும் என்பதை விளக்கினார். சமூகத்தில் பெண்களின் எதிர் பார்ப்புகள், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், வேலை, வாழ்க்கையில் சம உரிமை, சம வாய்ப்புகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். பெண்களுக்கு அதி காரம் சம உரிமை கிடைப்ப தற்கு இதுபோன்ற கருத்த ரங்குகளை நடத்துவதாக சிமாட்ஸ் பல்கலை கழக வேந்தர் டாக்டர் என்.எம். வீரையன் கூறினார். இயக்குனர் டாக்டர் ரம்யா தீபக், ஆசிரியர்கள், மாண வர்கள் இதில் கலந்து கொண்டனர்.