சர்வதேக மகளிர் தினத்தையொட்டி அன்னை லீலாவதி சுய உதவிக் குழு சார்பில் செவ்வாயன்று (மார்ச் 8) சர்மாநகர் ஜட்ஜ் பங்களாவில் மகளிர் விளையாட்டு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சுய உதவிக்குழுவின் ஊக்குநர் தி.சிந்து தலைமையில் 44ஆவது வார்டு கவுன்சிலர் சர்பஜெபதாஸ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் எஸ்.ராணி, தொண்டு நிறுவன நிர்வாகிகள் அன்பு செங்கோ அரசு, சில்வியா மற்றும் நா.கவிதா ஆகியோர் பங்கேற்றனர்.