விழுப்புரம்,ஜன.29- மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்ட அரங்கில் வாரந்தோறும் திங்கட் கிழமைகளில் மாவட்ட மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி யர் தலை மையில் தொட ர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, ஜன.29 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பர மேஸ்வரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறை சார்ந்த மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில் புகார் மனு கொடுக்க வந்த பெண் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவ லர்கள் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். பிறகு விசாரணை நடத்தினர். அவர் விழுப்பு ரம் வடக்கு தெரு, விராட்டி குப்பம் பகுதியை சேர்ந்த பாப்பாத்தி மகள் கரூர் மாவட்டம், சையது அப்பாஸ் மனைவி சாதிக்கா என்பது தெரிய வந்தது. அவரது சகோதரர், 10 ஆண்டுகளுக்கு முன்பு 20 சவரன் தங்க நகை மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை வாங்கியதாகவும், திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வரு வதால் காவல் நிலையங்க ளில் புகார் தெரிவித்தும் நட வடிக்கை இல்லை. இதனால்,தனது நகை, பணத்தை திரும்ப பெற்றுத்தர வலி யுறுத்தி கோரிக்கை மனு கொடுக்க வந்ததும் தெரிய வந்தது. பிறகு, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க அனுப்பி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.