விழுப்புரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்குவது செஞ்சி கோட்டையாகும். இக்கோட்டையை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வந்து செல்கிறார்கள். சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பின்படி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக கண்டு களித்த இடங்களில் இந்தியாவில் மாமல்லபுரத்துக்கு அடுத்தபடியாக 4-வது இடத்தை செஞ்சிக்கோட்டை பிடித்துள்ளது. செஞ்சி கோட்டையை பராமரிக்கும் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் இருந்தது இருந்தபடியே என்ற நிலையில் பழமை மாறாமல் கோட்டையை பராமரிப்ப தோடு, அடிப்படை வசதிகள் சிலவற்றை மட்டுமே செய்து வருகின்றனர். செஞ்சிக்கோட்டை வளாகத்தில் ஆஞ்ச நேயர் கோவில் அருகே சர்க்கரை குளம், செட்டிகுளம் என 2 குளங்கள் உள்ளன. அவைகள் படகு சவாரிக்கு தகுதி வாய்ந்தவையாக உள்ளது. இருப்பி னும் ஒன்றிய அரசு மூலம் படகு சவாரி ஏற்படுத்த யாரும் முயற்சிகள் மேற்கொள்ளாததால் அதற்கான கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இச்சிறப்பு வாய்ந்த செஞ்சி கோட்டை அமைந்துள்ள இடத்தின் அருகில் செஞ்சி- திருவண்ணாமலை சாலையில் ‘பி’ ஏரி அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஏரியில் வருடம் முழுவதும் தண்ணீர் இருப்பதால் படகு சவாரி செய்ய ஏற்ற இடமாகவும் உள்ளது. உள்ளூர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் முயற்சியால் ரூ.1 கோடியே 93 லட்சம் செலவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஏரியில் படகு சவாரி அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சி யர் மோகனிடம் கோரிக்கை மனுவும் கொடுத்துள்ளார்.
அந்த கோரிக்கை அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் செஞ்சி ஏரியில் படகு சவாரி ஏற்படுத்துவது குறித்து சுற்றுலாத் துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்படும் என செஞ்சி பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த ஏரியிலிருந்த ஆக்கிரமிப்புகள் தன்னார்வலர்கள் மூலமாக அகற்றப்பட்ட தன் காரணமாக, தற்போது ஏரியில் அதிக அளவில் மழை நீரை தேக்கி வைக்க முடிகிறது. இதனால் ஆண்டு முழுவதும் ஏரியில் தண்ணீர் தேங்கியிருக்கும். எனவே, ஏரியில் படகு சவாரி ஏற்படுத்தினால் சுற்றுலா பயணிகளின் வருகை அதி கரிக்கும். இதன் மூலம் செஞ்சிக்கு வரு வாயும் கிடைக்கும் வளர்ச்சியடைந்த நகர மாகவும் மாறுவதற்கு முதல் படியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இதன் மூலம் ஏராள மானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும். எனவே, விரைவில் படகு சவாரிக்கு அனுமதி கிடைக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. -பாவாடை பொன்னுசாமி