விழுப்புரம், டிச. 13- விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட குயிலாபாளையம் கிராமத்தில் 16 ஆண்டுகளுக்கு முன்பு பம்பை ஆற்றில் தரைப்பாலம் அமைக்கப் பட்டது. இந்த தரைப்பாலம் புதுச்சேரி - தமிழக பகுதிகளை இணைக்கும் பால மாக உள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் உள்ள ஏரி, குளம், கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. இத னால் குயிலாபாளையம் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை பெய்து வருவதால் வயல்வெளிகளில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேறுவதால் தரைப்பாலம் மூழ்கி அதற்கு மேல் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. குயிலாபாளையம், வனத்தாம்பாளையம், கொத்தபுரிநத்தம், சன்னியாசிகுப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் புதுவை மற்றும் தமிழக பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் தரைப்பாலத்தின் மேல் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஒவ்வொரு பருவமழைக் காலங்களிலும் தரைப்பாலத்தில் வெள்ளம் செல்வதால் அந்த வழியாக செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வரு கிறது. இதனால் பல கிலோ மீட்டர் சுற்றி வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாண வர்கள் பாலத்தை கடக்க பயந்து விடுமுறை எடுத்துக் கொள்வதாக வேதனையுடன் தெரி வித்தனர். எனவே அரசு குயிலாபாளையம் பகுதியில் உள்ள பம்பை ஆற்றங்கரையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.