விழுப்புரம், பிப். 9- பிரம்மதேசம் பகுதியில் உள்ள தர்பூசணி வயல்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே உள்ள சிறுவாடி, முருக்கேரி நகர், தலைக்காணிகுப்பம், வங்காரம், காயல்மேடு, தேவநந்தல், நாணக்கால்மேடு, நடுகுப்பம், வண்டிப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 2,500 ஏக்கரில் விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். தற்போது அவை அறுவடைக்கு தயாராக உள்ளன. ஒரு சில கிராமங்களில் தர்பூசணிகளை அறு வடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தர்பூசணி சாகுபடி செய்யப்பட்ட வயல்களுக்குள் கடந்த சில நாட்களாக நள்ளிரவில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக புகுந்து, பழங்களை தின்று அட்டகாசம் செய்து வருகின்றன. தற்போது பனிக்காலம் முடிந்து கோடைக் காலம் தொடங்கவுள்ள நிலையில், தர்பூசணி பழங்களை காட்டுப்பன்றிகள் தின்று சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். காட்டுப்பன்றிகள் அதிகம் உள்ள பகுதிகளில் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலம் அரசு நடவடிக்கை எடுத்து வருகி றது. அதுபோல் பிரம்மதேசம் பகுதி விவசாயிகள் நலன்கருதி காட்டுப்பன்றி களை துப்பாக்கியால் சுட்டு ஒழிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.