சென்னை, நவ.19 - வேளச்சேரி சாலையில் ஏர்போர்ஸ் சந்திப்பு முதல் ராஜகீழ்ப்பாக்கம் சந்திப்பு வரை அகலப்படுத்த கோரி சனிக்கிழமையன்று (நவ.19) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஜிஎஸ்டி சாலையை கிழக்கு தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி வழியாக சைதாப்பேட்டையை இணைக்கும் வகையில் வேளச்சேரி சாலை உள்ளது. 19 கி.மீ. நீளமுள்ள இந்த அகலமான சாலையில் ஏராள மான கல்வி நிலையங்கள், குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த சாலையில் தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் கிழக்கு தாம்பரம் ஏர்போர்ஸ் சந்திப்பு முதல் ராஜ கீழ்ப்பாக்கம் சந்திப்பு வரையிலான சுமார் 3 கி.மீ. தூரம் குறுகலாக உள்ளது. இதனால் அந்தப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது. எனவே, ஏர்போர்ஸ் சந்திப்பு - ராஜ கீழ்ப்பாக்கம் வரையிலான சாலையை அகலப்படுத்த வேண்டும், கவுரி வாக்கம், காமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை விரிவாக்கத்திற்கு தடையாக உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும், சேலை யூர் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கிழக்கு தாம்பரத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
வேளச்சேரி சாலையின் மையப்பகுதியில் மின்விளக்குகளை அமைக்க வேண்டும், கிறிஸ்துராஜா பள்ளி மற்றும் சங்கரா பள்ளிகள் அருகே நடைமேம்பாலம் அமைக்க வேண்டும், செம்பாக்கம், கேம்ப்ரோடு உள்ளிட்ட இடங்களில் நவீன பேருந்து நிழற் குடைகள் அமைக்க வேண்டும், சாலை சந்திப்புகளில் தானியங்கி சிக்னல்கள் அமைக்க வேண்டும் என்றும் கையெ ழுத்து இயக்கத்தில் வலியுறுத்தப் பட்டது. கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசிய கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், “வேளச்சேரி சாலை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கி 20 ஆண்டுகளாகியும் முடி வடையாமல் உள்ளது. தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டம் அறி விக்கப்பட்டு 10 ஆண்டுகளை கடந்தும் பணி தொடங்கப்படாமலே உள்ளது. இதனை விரைந்து முடிக்கவேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். இந்த கையெழுத்து இயக்கத்தை கட்சியின் தாம்பரம் கிழக்கு, செம் பாக்கம், செம்பாக்கம் புதுநகர், மாடம்பாக்கம் கிளைகள் நடத்தின. மூத்த தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.செந்தில்குமார், பகுதிக்குழு உறுப்பினர்கள் ஜெய வேல், கோவிந்தன், தமீம்பாஷா, யாயாதீன், ெஜயந்தி, முத்துலட்சுமி, கிளைச் செயலாளர்கள் மதிவாணன், குழந்தைசாமி, தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.