கிருஷ்ணகிரி, நவ.21- ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் 2023-24 ஆம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி (கோட்) அணிவிக்கும் விழா நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனர், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் எம்.தம்பிதுரை எம்பி கலந்து கொண்டு மாணவர்களுக்கு அங்கி அணிவித்தார். கல்லூரியின் அறக்கட்டளை தலைவர் மருத்துவர் பானுமதி தம்பிதுரை, அறக்கட்டளை செய லாளர் மருத்துவர் லாசியா தம்பி துரை,அறக்கட்டளை உறுப்பினர் மருத்து வர் நம்ரதா தம்பிதுரை, கல்லூரி முதல்வர் மருத்துவர் சோமசேகர்,மருத்துவ இயக்கு நர் மருத்துவர் ராஜா முத்தையா, மருத்துவ மனை மேற்பார்வையாளர் மருத்துவர் வாசுதேவா, மருத்துவமனை இருப்பிட மருத்துவர் பார்வதி கலந்து கொண்டு 150 மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கியை அணிவித்தனர். முடிவில் வேளாங்கண்ணி பள்ளி,செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.